Tuesday, March 18, 2014

தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmoligal

தமிழ் பொன்மொழிகள் (Tamil Ponmoligal)

Read the famous quotes (பொன் மொழிகள்) from worlds greatest leaders in tamil language.

  • காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்
  • கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது. - பிளேட்டோ
  • அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான். - காந்தியடிகள்
  • நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. -சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
  • "நீரை சல்லடையில் கூட அள்ளிவிடலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். - யாரோ
  • அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது. - ஓர் அனுபவசாலி
  • நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். - காந்திஜி
  • ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்
  • நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்
  • கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும் - கிளெண்டல்
  • இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்
  • உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.
  • நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்
  • நியாயம், நேர்மை உங்கள் செயல்பாடுகளில் வெளிப்பட மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள். - லத்தீன்
  • கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்
  • என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி
  • நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்
  • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும் - மு.வ.
  • நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - ஜான்ஸன்
  • ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். - வில்லியம் ஹாஸ்விட்
  • உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது. - எமர்சன்
  • அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான் - யாரோ
  • துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்
  • நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.- பிரான்ஸ்
  • பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக இருத்தல்.
  • உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர். அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள். - போலந்து.
  • மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே! - கிரீஸ்



No comments:

Post a Comment